Loading...

இணையம் இயங்குவது எப்படி?

வெள்ளி, 16 டிசம்பர், 2011

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.


தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.


கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.


அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது.


இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.


நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.


நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது.


இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.


இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாகwww.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும்.


இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது.


முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன.


இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது.


ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு.


ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

Read more...

Random Access Memory - மெமோரி பயன்பாடு

செவ்வாய், 13 டிசம்பர், 2011


நாம் கணினியில் பயன்படுத்தும் RAM – Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை

1. தற்காலிக நினைவகம் – Temporary Memory area

2. நிலையான நினைவகம் – Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன
இவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk,
CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சேமிக்கப்படும் தகவல்களை எப்பொழுதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நிலையானவை.

கணினியில் நாம் எந்த ஒரு வேலையைச் செய்யவேண்டுமென்றாலும் அவ்வேலையைச் செய்வதற்கு என ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமென்பது (அல்லது செயலியை) உங்களுக்குத்தெரியும். எடுத்துக்காட்டாக நான் ஒரு கடிதம் தயார் செய்ய வேண்டும் என்றால், என்னிடம் Ms-Word போன்ற மென்பொருளும், படம் வரைய CorelDraw போன்ற மென்பொருள் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள் அவசியமாகிறது. இத்தகைய மென்பொருள்களும் நமது கணினியில் நிலையாக Hard Disk என்னும் சேமிப்புக்கருவியில் சேமித்து வைக்கப்படவேண்டும் அப்பொழுதுதான் நாம் வேண்டிய நேரத்திற்கு அவற்றை உபயோகிக்க முடியும்.

இத்தகைய மென்பொருள்கள் நாம் ஒரு கட்டளையை கணினிக்கு இட்டால் அது அவ்வேலையை எப்படிச்செய்யவேண்டும் என்ற தகவல்களைத்தந்து உதவுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு கோப்பை நான் அழிக்க வேண்டும் என்றால் அதற்கான
கட்டளையைக் கொடுத்தவுடன் கணினி அந்த கட்டளைக்கான தகவல்கள்
எங்கிருக்கின்றன எனத்தேடிக் கண்டுபிடித்து அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப்படித்து அதன்பின் அதில் கூறப்பட்டுள்ளவாறு நடந்து அந்த கோப்பினை அழிக்கிறது. அதுபோல நான் எழுதியுள்ள ஒரு வரியை சிகப்பு நிறத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் நான் எந்த மென்பொருளை அப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறேனோ அந்த மென்பொருளில் இருந்து சிகப்பு நிறத்திற்கு ஒரு வரியை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதைப்படித்து அவ்வாறு செய்து அதன் நிறத்தை மாற்றுகிறது ஆக எந்த ஒரு கட்டளையானாலும் அந்த கட்டளைக்கான, அதை நிறைவேற்றுவதற்கான தகவல்கள் நமது கணினியில் மென்பொருளாக ஏற்றப்பட்டிருக்கவேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் கொடுக்கும் கட்டளைக்காண தகவலைத்தேடிவிட்டு இது செல்லத்தக்க கட்டளை இல்லை என்று கூறிவிடும்.

பொதுவாக இத்தகைய மென்பொருள்களைக் Hard Disk என்னும் சேமிப்பு கருவியில் தான் சேமித்துவைக்கிறோம். நாம் தரும் ஒவ்வொரு கட்டளைக்கும் கணினி தேவையான தகவல்களை hard diskல் இருந்து எடுத்துக்கொண்டிருக்க முடியாது அவ்வாறாக அது ஒவ்வொரு கட்டளைக்கும் hard diskஐப் பயன்யடுத்தி அதனுள் இருந்து அந்த கட்டளைக்கு என்ன செய்யவேண்டும் என்ற தகவலை எடுத்து அதன்படி நடக்க வேண்டும் என்றால் இது மிக அதிக நேரம் எடுத்துகொளளக் கூடியது ஏனெனில் hard disk ல் தட்டுகளில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன அவற்றை எடுப்பதற்கு அந்த தட்டுகள் சுற்றப்பட்டு அதில் சரியான தகவல் சேமிக்கப்பட்டுளள பகுதியில் சென்று தகவலை எடுத்துத்தர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் கணினியும் மிகமெதுவாகவே செயல்படும்.

இத்தகைய சிரமங்களைத் தவிர்த்தல் பொருட்டு நாம் எந்ததெந்த மென்பொருள்களைப் பயன்படுத்திக்கொண்டிருகிறோமோ அந்த மென்பொருள் மொத்தத்தையும் வேறு ஒரு மின்னனு பதிவுக்கருவிக்கு தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் தகவல் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கணினி அந்த மின்னனுக்கருவியிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வழிசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய மின்னனுக்கருவி நமது கணினியின் Microprocessor களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவல்லவை. இக்கருவியே (இராம்) RAM என்று அழைக்கப்படுவதாகும்.

இந்த வகைச் சேமிப்பு கருவிகள் மின்சார இணைப்பு இருக்கும் வரைக்கும் இயங்கும், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிந்துபோய்விடும் அதனால் தான் இதனை தற்காலிக சேமிப்பு பகுதி என்று கூறுகிறோம்.

பொதுவாகவே எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் இயக்கினால் சில மணித்துளிகள் கழித்தே அவை இயங்க ஆரம்பிக்கும் அக்கால இடைவெளியில் கணனியில் நாம் இயக்கும் மென்பொருளின் அனைத்து வேண்டிய தகவல்களும் (இராம்)RAM என்னும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகினறன. அதன்பிறகு எந்த ஒரு கட்டளையை நீங்கள் இட்டாலும் அது உடனே அதனை நிறைவேற்றுவதைப் பார்க்கமுடியும். (நீங்கள் Ms-word, excel போன்ற மென்பொருளை இயக்கிப்பாருங்கள்).

அடுத்து அந்த மென்பொருளை விட்டு வெளியேரும் பொழுது அந்த மென்பொருள் சம்பந்தப் பட்ட அனைத்து தகவல்களும் RAM நினைவில் இருந்து அகற்றப்பட்டு வேறு ஏதாவது செயலிக்குள் நுழைதால் அவை உடனே அதில் ஏற்றப்படும்.

இத்தகைய RAM நினைவகத்தின் கொள்ளளவு Byte என்னும் அளவீட்டால் குறிக்கப்படுகிறது இது ஏற்கனவே (பழைய கட்டுரையில்) நான் கூறியது போல ஒரு Byte இடத்தில் ஒரு எழுத்தை நாம் சேமிக்க முடியும்.

1024 Byte கள் சேர்ந்து அது – 1 kilo byte (KB)

1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அழைக்கப்படுகின்றன.

1024 MB கள் சேர்ந்து 1GB ஆகும்.

பிற்குறிப்பு: தற்போதைய கணினிகளில் 1GB யிலிருந்து 16 வரையிலான அளவுகளில் ’மெமரி சிப்’ பயன்படுத்தப்படுகின்றன.

Read more...

ஜிமெயில், யாஹு, ஹாட் மெயில் அச்சுறுத்தல்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறைகளாகவே இருந்து வருகின்றன.

எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது.

மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.


1. நண்பர்களை எப்போதும் நம்பாதீர்கள்:

பிரபலமான வங்கிகளின் பெயர்களில், நம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் கேட்டு வரும் இமெயில்கள் குறித்து நாம் கவனமாகவே இருக்கிறோம். இவை எப்போதும் போலியாகவே உள்ளன.

இதனால் தான், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இன்டர்நெட் வழி கணக்கினைத் திறக்கும் முன்னரே, தங்கள் வங்கி எப்போதும் இது போன்ற தகவல்களைக் கேட்டதில்லை; கேட்கவும் மாட்டோம் என அறிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது நம்மை மாட்ட வைக்கும் இமெயில்கள், நம் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் குடும்பத் தினரிடமிருந்து வருபவையாக உள்ளன. இதனால், நாம் உடனே அவை பற்றி இரண்டாம் சிந்தனை இல்லாமல், லிங்க்குகளில் கிளிக் செய்து விடுகிறோம். அவை நம்மை மாட்ட வைக்கும் தளங்களுக்கும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கும் வழி அமைக்கின்றன.

எனவே எத்தகைய உறவு முறை உள்ளவர்களிடமிருந்து, லிங்க்குகளோடு வரும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே, அந்த அஞ்சலில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும்.

2.நம்மை செயல்படாமல் வைத்தல் :

சென்ற மே மாத இறுதியில், ஹாட்மெயில் தளத்திற்கு வந்த மின்னஞ்சல் செய்திகளில் ஒரு புதிய வழிமுறையை ஹேக்கர்கள் பின்பற்றியதாக, ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மின்னஞ்சல் செய்திகள் தனி நபர்களைக் கவரும் வகையில் வெளியிடப்படுகின்றன.

அஞ்சல்கள் முன் தோற்றப் பார்வையில் காட்டப்பட்டு, அதன் வழியிலேயே, அக்கவுண்ட் வைத்திருப்போரைக் கவிழ்த்திடும் வழிகள் தரப்பட்டிருந்தன. இதில் உள்ள ஒரு ஸ்கிரிப்ட் தானாக இயங்கி, மெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தனி நபர் தகவல்களைத் திருடும் வழிகளை மேற்கொள்கின்றன.

இத்தகைய தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன், மைக்ரோசாப்ட் உடனே அதனைச் சரி செய்தது. இருப்பினும் பாதிப்பு பன்னாட்டளவில் அதிகமாகவே இருந்தது.

ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தில் புகுத்தப்பட்ட கெடுதல் வழி வேறு மாதிரியாக இருந்தன. இந்த கெடுதல் வழிகள், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஆய்வு செய்து, வைரஸ்களைக் கண்டறியும் குறிப்புகளைச் செயல் இழக்கச் செய்து, தங்கள் வேலையை முடித்துக் கொண்டன.

3.தொடரும் நாசம் :

ஒரு கம்ப்யூட்டரைத் தாக்கியவுடன், தொடர்ந்து அதனையே தாக்குவதற்கான வழிகளையும் இந்த கெடுதல் வழிகள் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், ஒருமுறை தனி நபர் தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பயன்படுத்தி தொடர் அழிவு வேலைகளை மேற் கொள்வது இவற்றிற்கு எளிதாகிறது.

4. புதிய அறிவுரைகள்:

வழக்கமான எச்சரிக்கைகளுடன், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் புதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மின் அஞ்சலில் ஏதேனும் இணைய தளத்தின் முகவரிக்கான லிங்க் தென்பட்டால், அதன் சொற்களில் உள்ள எழுத்துக்களில் மாறுதலான எழுத்துக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும்.

இந்த தளங்கள் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகுள் மற்றும் பிரபலமான தளங்களின் பெயர் களோடு தள முகவரியைக் கொண்டிருக்கும். ஆனால் உற்று நோக்கினால், இவற்றின் பெயர்களோடு ஒன்றிரண்டு எழுத்துக்கள் இணைக்கப் பட்டு, கெடுதல் விளைவிக்கும் தளங்களுக்கான முகவரிகளாக இருக்கும்.

ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பிரபல மெயில் தளங்கள் தொடக்கத்தில் காட்டப்பட்டு, அடுத்தடுத்த மெயில்களைக் காட்டாமல், அது சரியில்லை, இது சரியில்லை என்று பிழைச் செய்தி வருகிறதா? இணைய இணைப்பு இருக்கும்போதே, எந்த தளமும் கிடைக்க மறுக்கிறதா? உங்கள் டி.என்.எஸ். சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறதா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்ட இந்த வகை கெடுதல் விளைவிக்கும் வழிகளுக்குப் பலியாகி விட்டதென்று பொருள்.

மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தரும் அப்டேட் பேட்ச் பைல்களை இயக்கி வைக்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால், நல்ல நிலையில் கம்ப்யூட்டர் இயங்கிய போது ஏற்படுத்திய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்லவும்.

ஆனால் இவை எல்லாம் நிரந்தரத் தீர்வாகிவிடாது. பொறுமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து, கவனமாகச் செயல் படுவதே நல்லது.

Read more...

கூகுள் மொபைல் மணிபர்ஸ்

வெள்ளி, 10 ஜூன், 2011

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது.

இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும்.

கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.

கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.

முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும்.

பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.

சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.

கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம்.

பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.

கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும்.

இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே.

Read more...

கணினிக்கு மின்சப்ளை

செவ்வாய், 31 மே, 2011

கணினிக்கு மின்சப்ளை

கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம். இது மாறுதிசை (AC) மின்னோட்டத்தை நேர்திசை (DC) மின்னோட்டமாக மாற்றுகிறது.

SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது.


இந்த மின் இணைப்பான் இருவகைப்படும்.

  • 1.AT வகை மின் இணைப்பான்
  • 2.ATX வகை மின் இணைப்பான்

AT வகை மின் இணைப்பான்

இது இரண்டு 6 பின்களைக் கொண்ட மின் இணைப்பான்.இதில் +5v, +12v, Ground, -12v,-5v எனப் பலவகையான நேர்மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறது.இப்போது வரும் மதர்போர்டில் இது பயன்படுத்தப்படுவதில்லை.

ATX வகை மின் இணைப்பான்

இதில் பல வண்ண ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு வண்ணமும் அது கடத்தும் மின்னழுத்தத்தை குறிக்கிறது.இப்போது வரும் மதர்போர்டில் இந்த வகை இணைப்பான்களே பயன்படுத்தப்படுகிறது.

Read more...

கணினி பாகங்களை இணைக்கலாம்.

ஞாயிறு, 22 மே, 2011

கணினி பாகங்களை எவ்வாறு இணைப்பது?   பாடம் நடத்தும் வீடியோ

Read more...

ஹார்ட்டிஸ்க் இயங்கும் விதம் (நேரடி வீடியோ)

நம் கணினியில் இயங்கும் வன்தட்டு (HARDDISK) எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை நேரடியாக காணலாம். 

அறிய வீடியோ

Read more...

மதர்போர்டை அறிவோம்.

மதர்போர்டை (தாய்பலகை)  அறிவோம்.

மதர்போர்ட்

இது கணினியின் அனைத்து வன்பொருள்களும் சங்கமிக்கும் ஒரு பெரிய சர்க்யூட் பலகையாகும்.இதை ஆங்கிலத்தில் Printed Circuit Board (PCB ) என்பர். ஏனென்றால் சர்க்யூட்கள் அனைத்தும் பலகையிலே அச்சடிக்கப்படுவதால் இது பிரின்டட் சர்க்யூட் போர்ட் என்று அழைக்கப்படுகிறது.

மின் இணைப்பான்:

மின்சப்ளை பகுதியிலிருந்து (SMPS) வரும் மின்சாரத்தை மதர்போர்டுக்குக் கொடுக்கு உதவுகிறது.
பிராஸசர் இணைப்பான்:

பிராஸசரை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.

சில்லுத்தொகுப்பு:

பலவகை கட்டுப்பாட்டு சர்க்யூட்கள் உள்ளிணைக்கப்பட்ட ஒரு சில்லு ஆகும். இதை மையமாக வைத்தே மதர்போர்ட் வடிவமக்கப்படுகிறது.

நினைவக இணைப்பான்:

 ராம் நினைவகத்தை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.இது சிம்(SIMM), டிம்(DIMM), ரிம்(RIMM)  எனப் பலவகைப்படும்.

பயாஸ் ரோம்(BIOS):

இது கணினியின் அடிப்படை செயல்களுக்கான மென்பொருளை கொண்டிருக்கும் அழியா நினைவகம் ஆகும்.

சீமாஸ் மின்கலம்(CMOS Battery):

ஒரு ரூபாய் நாணயம் அளவு சிறிய மின்கலம் மதர்போர்டில் இருக்கும். நமது வன்பொருள்களை பற்றிய தகவல்களை சேமித்துவைத்திற்கும் நினைவகத்திற்கு தொடர்ந்து மின்சப்ளை கொடுப்பதற்காக உள்ளது.

Read more...

டவுன்லோட் பிரச்சனை

செவ்வாய், 10 மே, 2011

கேள்வி: எனது கணினியில் கடந்த இரண்று மூன்று நாட்களாக  புதிதாக வந்துள்ள பாஸ்ட் வைப் என்ற சாப்ட் வேரை
டவுன்லோட் செய்து ரென் பன்னும்போது 65 சதவிகிததிற்குமேல் டவ்ன்லோட் ஆனபிறகு இன்டர்நெட் எக்ஸ்புளோர் ஸ்டாப்ட் திஸ் டவ்ன்லோட் ஸின்ஸியர் எரர் என்று வருகிறது  என்னிடம் இருந்த இன்டர்நெட் டொவ்ன்லோட் மேனேஜர் தேதி முடிந்து விட்டதால்  மீன்டும் டவ்ன் லோட்மேனேஜர் டவ்ன்லோட் செய்தேன்.  அங்கேயும் இதே பிரச்சனைதான் சொல்கிறது  இதை எப்படி கிளீர்செய்வது விளக்கமாக எழுதவும் நன்றி-
நட்புடன்....
அப்துஸ் ஸமது இப்னு குலாம் தஸ்தகீர்
பொதுவாக இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  முதலில் உங்களின் எக்ஸ்புளோர் பதிப்பு பழையதாக இருந்தால் இந்த சிக்கல் வரலாம். குறிப்பாக எக்ஸ்புளோர் பதிப்பு 6 ஐ பயன்படுத்துபவர்களுக்கு இது போன்ற சிக்கல்கள் தவிக்க முடியாததாகி விடும்.    பிறகு 7ம் பதிப்பு 8ம் 9ம் பதிப்பு என்று மைக்ரோசாப்ட் பழைய எரர்களையெல்லாம் களைந்து புதிய பதிப்புகளை கொண்டு வந்தது.  ஆனாலும் அவ்வப்போது சில இடற்பாடுகள் தென்படத்தான் செய்கின்றன.

புதிய எக்ஸ்புளோர் டவுன்லோட் பகுதி

Unleash the beauty of web

இதை டவுன்லோட் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு அந்த பிரச்சனை வராது.

கூகிள் அறிமுகப்படுத்தி இணைய உலகில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் குரோம் என்ற பிரவுஸர் உங்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும் என்று நினைக்கிறோம்.  டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.



இதன் பிறகும் பிரச்சனைத் தொடர்ந்தால் எழுதுங்கள்.

Read more...

கணினி கேள்வி பதில்

சனி, 7 மே, 2011

கேள்வி: இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, முழுமையாக நீக்க என்ன செய்ய வேண்டும்?
-சே. திருமூர்த்தி, மதுரை.

பதில்: சில புரோகிராம்களில், அதனை நீக்குவதற்கான வழிகளையும் தந்திருப் பார்கள். ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராம் லிஸ்ட்டில் பார்த்தால், Uninstall என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் நீக்க விரும்புவதனை உறுதி செய்து, கேட்கும் கேள்விகளுக்கான பதில் தெரிவித்தால், கூடுமானவரை முழுமையாக நீக்கப்படும்.

கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட் / ரிமூவ் (Add or Remove) புரோகிராம் பட்டியலைப் பெற்று, அதில் நீக்க விரும்பும்புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, Remove என்ற பட்டனை அழுத்தலாம். இந்த முறையில் முழுமையாக அது நீக்கப்படும் எனச் சொல்ல முடியாது. தொடர்பான சில சிறிய புரோகிராம்கள் தங்குவதுண்டு.

அடுத்ததாக, Revo Uninstaller என்பன போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களின் உதவியை நாடலாம். இவை இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை முழுமையாக நீக்கும்.

கேள்வி: தொழில் நுட்ப ரீதியாக மட்டுமின்றி, பல வேளைகளில், சாதாரணமான இரண்டு விஷயங்களுக் கிடையேயுள்ள வேறுபாடு சட்டெனத் தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. இந்த சூழ்நிலைகளில் நமக்கு உதவிடும் இணைய தளங்கள் ஏதேனும் உண்டா?
-டி. வித்யா சுந்தர், கோவை.

பதில்: உங்கள் தேவையை மனதில் கொண்டு இணையத்தில் உலா வந்த போது, மிகவும் ஆச்சரியமாக உங்கள் சந்தேகத்தின் பெயரிலேயே ஒரு தளம் இயங்குவது தெரிய வந்தது. இதன் பெயர் டிபரன்ஸ் பிட்வீன் டாட் காம். (differencebetween.com) இத்தளத்தின் முழு முகவரி http://www.differencebetween.com/.
இந்த தளம் சென்றவுடன், உங்களுக்கு விளக்கம் தேவைப்படும் பொருள் எந்த பிரிவில் உள்ளதோ, அந்த தலைப்பில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் மெனு சென்று பெறலாம். டெக்னாலஜி, பேஷன், சயின்ஸ் அண்ட் நேச்சர், பொதுவானவை, மக்கள், ஹெல்த், கல்வி எனப் பல பிரிவுகள் உள்ளன.

இதன் சிறப்பு, உங்களுக்கு நன்கு தெரிந்த இரண்டு விஷயங்களுக் கிடையேயான வேறுபாடு குறித்த உங்கள் குறிப்புகளையும் இதில் அப்லோட் செய்திடலாம்.

கேள்வி: வீட்டுக் கம்ப்யூட்டரில், எம்.எஸ். ஆபீஸ் 2007 புரோகிராம், விண்டோஸ் 7 ஓ.எஸ்.ஸில் பயன்படுத்துகிறேன். இதில் பி.டி.எப். பைல் தயாரிக்க முடியவில்லை. ஆனால் என் அலுவலகக் கம்ப்யூட்டரில் உள்ளது. ஏன்? இதனைக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும்?
-டி.முருகதாஸ், திருத்தங்கல்.

பதில்: கவலைப் பட வேண்டாம். வீட்டில் உள்ள ஆபீஸ் தொகுப்பில் பி.டி.எப். பைல் உருவாக்கும் வசதி அமைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதற்கான ஆட் ஆன் தொகுப்பு இன்ஸ்டால் ஆகாமல் இருக்கலாம். இதனைக் கொண்டு வர, உங்களுக்குத் தேவையானது 2007 Microsoft Office Addin: Microsoft Save as PDF or XPS என்கிற ஆட் ஆன் தொகுப்பு. இதனை மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்தே பெற்றுக் கொண்டு இன்ஸ்டால் செய்திடவும். அந்த தளம் சென்று, ஆட் ஆன் தொகுப்பு பெயர் கொடுத்துத் தேடிப் பெறவும். இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்திய ஆபீஸ் தொகுப்பினைப் பதிந்திருக்க வேண்டும். விண்டோஸ் 7 தொகுப்பும், நகல் தொகுப்பாக இருக்கக் கூடாது.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் எட்ஜ் என்றும் ரேஞ்ச் (டேட்டா ரேஞ்ச்) என்றும் சொல்லப்படும் இரண்டும் ஒன்றுதானே. ஏன் இரண்டு லேபிள் தருகிறோம். வேறுபாடு உண்டா?
-கே. பிரியா, சிவகாசி.
பதில்: இரண்டும் செல்கள் குறித்த சொற்கள் என்றாலும், வேறுபாடு உள்ளது. டேட்டா தரப்பட்டுள்ள கடைசி செல்லை ஆங்கிலத்தில் “edge” என்று அழைக்கிறோம். ஒரு டேட்டா ரேஞ்சில் (Data Range) இறுதியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்லை இது குறிக்கிறது. டேட்டா ரேஞ்ச் என்பது தொடர்ச்சியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்களாகும். ரேஞ்ச் என்பதன் முடிவில் ஒரு காலியான படுக்கை வரிசை அல்லது நெட்டு வரிசை இருக்கும். அதன் பின்னால் மேலும் ஒரு டேட்டா ரேஞ்ச் தொடங்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டர்களில் ஒன்றில், பல ஆண்டுகளாக விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். தற்போது சிக்கல் வருமோ எனத் தெரிகிறது. எப்படி ரெஜிஸ்ட்ரி பேக் அப் எடுப்பது? பிரச்னை ஏற்பட்டால், பேக் அப் பைலை எப்படி திரும்ப அமைப்பது?
-கே. திலகராணி, விருதுநகர்.
பதில்: ரெஜிஸ்ட்ரியைத் திறந்து அதில் எடிட்டிங் வேலையை மேற்கொள்கையில் சிக்கல் ஏற்பட்டால், இந்த பேக் அப் பயன்படும்.
Start /Run சென்று அங்கு கிடைக்கும் பாக்ஸில் regedit என டைப் செய்திடவும். அடுத்து File மெனு கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Export என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் இதனை சேவ் செய்திட ஒரு இடம் தேர்ந்தெடுத்து அதில் இந்த பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பெயர் இருக்க வேண்டும். அதாவது என்று இந்த பேக் அப் எடுத்தது என்பது போன்ற தகவலுடன் பெயர் இருப்பது நல்லது.

விண்டோஸ் சிஸ்டம் தானாக ஒரு ரெஜிஸ்ட்ரி பேக் அப் பைலை ஒவ்வொரு முறை நீங்கள் கம்ப்யூட்டரை மூடுகையில் உருவாக்குவது உங்களுக் குத் தெரியுமா? கம்ப்யூட்டரை மூடுகையில் ஒவ்வொரு முறையும் Windows is saving your settings என்று வருகிறது அல்லவா! அப்போது விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்கிறது. இருப்பினும் நாமும் சேவ் செய்வது நமக்கு நல்லது.

சரி, உங்கள் கேள்வியின் அடுத்த பகுதிக்கு வருவோம். பிரச்சினை ஏற்பட்டது என்றால் எப்படி இதனை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம்.

Registry Editorல் Registry மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து உங்கள் பேக் அப் பைலைச் சுட்டிக் காட்டுங்கள். அதன் பின் Import Registry என்பதில் கிளிக் செய்திடுங்கள். மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடுங்கள். சரியாகிவிடும். நீங்கள் வழக்கமாக பேக் அப் செய்திடும் பணியை ஒரு புரோகிராம் மூலம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவரா? கவலையே இல்லை. நீங்கள் அந்த புரோகிராமில் எந்த எந்த பைல்களை எல்லாம் தானாக பேக் அப் செய்திட வேண்டும் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் இதற்கான இரண்டு பைல்களையும் சேர்த்துவிடுங்கள். சேர்க்க வேண்டிய பைல்களின் பெயர்கள்: “User.dat” மற்றும் “System.dat”.

கேள்வி: வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, சர்வீஸ் பேக் கொண்டு அப்டேட் செய்யச் சொல்கிறீர்கள். அப்டேட் செய்வதற்கும், வைரஸ் அழிப்பதற்கும் என்ன சம்பந்தம்? அதற்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளனவே.
-சி. கனகராஜ், சென்னை
பதில்: அப்டேட் பைல் பயன்பாடு என்பது, வரும் முன் காப்பது. வந்தபின் மேற்கொள்ளும் வைத்தியமே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்பாடு. பிரவுசரில் வைரஸ்கள் நுழையக் கூடிய இடங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப் பட்டு அவற்றைச் சரி செய்திட இந்த அப்டேட் புரோகிராம்கள் வழங்கப் படுகின்றன. எனவே அப்டேட் செய்யப்படாவிட்டால் அந்த குறைகள் உள்ள இடங்கள் வழியாக வைரஸ்கள் நுழைய வாய்ப்புகள் அதிகமாகின்றன. எனவே அப்டேட் செய்து வரும் முன் காத்துக் கொள்வது நல்லது தானே.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், வரிகளில் இறுதியாக வரும் சொல்லினை, வேர்ட் புரோகிராம் ஹைபன் கொடுத்து அமைக்கிறது. இது எந்த அடிப்படையில் நடைபெறுகிறது? சொல் ஒன்றில் இத்தனை எழுத்துக்கள் இருந்தால் பிரிக்கலாம் என்று ஏதேனும் வரையறை உள்ளதா? இதனை எப்படி அறிந்து கொள்வது?
-கே. எஸ். தீபக் கிருஷ்ணன், திருப்பூர்
பதில்: அருமையான கேள்வி. இந்த ஹைபன் தரும் முறையினை எவரும் இவ்வளவு ஊன்றி எண்ணிப் பார்த்தது இல்லை. வேர்ட் உங்கள் டாகுமெண்ட் டை ஹைபனேட் செய்திடுகையில், ஹைபனேட் செய்யப்படும் சொல்லில் எவ்வளவு பகுதியை முந்தைய வரியில் அமைக்க முடியும் என்று கணக்கிடுகிறது. இதற்காக ஹாட் ஸோன் அல்லது ஹைபனேஷன் ஸோன் என்பதைக் கணக்கிடுகிறது. ஒவ்வொரு வரியிலும் தேவைப்படும்போது இந்த ஹாட் ஸோன் வலது முனையில் கிடைக்கிறது. இந்த ஹாட் ஸோன் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அதாவது 0.25 அங்குலம் என வைத்துக் கொண்டால் அந்த அளவிற்குள் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடமுடிந்தால் மட்டுமே, வேர்ட் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடும். இல்லை என்றால் அடுத்த வரிக்குக் கொண்டு வந்திடும். இதனை செட் செய்வதற்குக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.
மெனு பாரில் Tools அழுத்திப் பின் Language என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த சப் மெனுவில் Hyphenation என்ற பிரிவு இருக்கும் இதனைக் கிளிக் செய்தால் Hyphenation என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் ஒரு டாகுமெண்ட் தானாக ஹைபனேட் செய்திடட்டுமா? பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களை மட்டும் ஹைபனேட் செய்திடவா? என்ற ஆப்ஷன்களோடு Hot Zone எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற ஆப்ஷனும் தரப்படும். இதனை நாமே செட் செய்து கொள்ளலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறி, ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டில் இதனைச் சோதனை செய்து கொள்ளலாம்.

Read more...

கணினிக்கு நீங்கள் புதியவரா..!

நாம் தினந்தோறும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பார்ப்பது எல்லாம் மானிட்டர் திரையைத்தான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது என்றாவது பார்த்திருக் கிறீர்களா? ஒரு சிலர் சிபியூ கேபினை மூடி வைத்த சிறிய பெட்டிக்குள் வைத்து இயக்குவார்கள். இயக்கும்போது மட்டும் அதனைத் திற்ந்து வைத்துக் கொள்வார் கள். எப்படி இருந்தாலும் அதன் வெளிப்புறத்தைத்தானே பார்க்கிறோம்.


சரி, கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கப் போகிறது? மதர்போர்டு, ஹார்ட் டிஸ்க், டிரைவ்கள் மற்றும் இவற்றை இøணைக்கும் கேபிள்கள். இவற்றைப் பார்த்துப் பெரிதாக என்ன தெரிந்து கொள்ளப்போகிறோம். நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம் நம் ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு என்ன? சிப்பின் தன்மை என்ன? அதன் சைக்கிள் ஸ்பீட் என்ன? ராம் எவ்வளவு? இன்னும் எத்தனை போர்ட் உள்ளன? எத்தனை சாதனங்களை இணைக்கலாம்? ஓ.எஸ். எத்தனாவது பதிப்பு? அதில் சர்வீஸ் பேக் என்ன இணைந்துள்ளது? என்பவற்றை அறிந்து கொள்வதில்தான் நன்மையே உள்ளது.

அடேயப்பா எத்தனை விஷயங்கள்! இவற்றை எல்லாம் எப்படி அறிந்து கொள்வது? ஒவ்வொன்றாய் தெரிந்து கொள்ள முயற்சித்தால் நேரம் எவ்வளவு செலவாகும்? இதற்கெல்லாம் ஒரு வழி தரும் வகையில் சில சாப்ட்வேர் தொகுப்புகள் இணையத்தில் கிடைக் கின்றன. அவற்றில் சிறந்ததாக இரண்டு தெரிய வந்தன. அவை குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

முதலாவதாக CPUID என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் CPU-Z என்ற புரோகிராம். இது ஒரு டயாக்னஸ்டிக் புரோகிராம். அதாவது மேலே சொன்ன அனைத்து கம்ப்யூட்டர் பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து அதன் தன்மைகளை ஒரு டெக்ஸ்ட் பைலாகத் தரும் புரோகிராம். இதனை http://www.cpuid/. com/cpuz.php என்ற தளத்தில் காணலாம். இதனை காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இயக்கினால் கம்ப்யூட்டரில் உள்ள சிலிக்கான் பாகங்களின் இயல்பு அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

CPU-Z புரோகிராமினைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட புரோகிராம் ஒன்றினைக் காண முடிந்தது. அதன் பெயர் Sandra. இதனை வழங்குவது SiSoftware என்ற நிறுவனம்.இது அடிப்படையில் இலவசமாய்க் கிடைக் கிறது. ஆனால் கூடுதல் தகவல்கள் பெற கட்டணம் செலுத்திப் பெறலாம். இலவசமாய்க் கிடைக்கும் புரோகிராமே நமக்குப் போதும். இது மேலே சொன்ன CPU-Z புரோகிராம் தரும் அனைத்து தகவல்களையும் தருவதுடன் கூடுதலாகச் சில தகவல்களையும் தருகிறது. கம்ப்யூட்டரின் பிரிவுகள் அனைத்தும் இன்னும் சிறப்பாகச் செயல்பட சில பரிந்துரைகளையும் தரும். இந்த புரோகிராமினை http://www.sisoftware.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

இந்த புரோகிராம்களைப் பயன்படுத்தி கிடைக்கும் தகவல்கள் நீண்ட குறிப்பாகப் பல பக்கங்களில் கிடைக்கும். பல விஷயங்கள் டெக்னிக்கலாக இருக்கும். இருப்பினும், அவற்றை அறிந்த ஒருவரின் துணையோடு உங்கள் கம்ப்யூட்டர் குறித்த விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

எனவே கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது? என்ற கேள்வி மனதில் எழுந்தவுடன் ஸ்குரூ டிரைவரை எடுத்துக் கொண்டு இறங்கிவிட வேண்டாம். மேலே சொன்ன சாப்ட்வேர் புரோகிராம் களை இறக்கிப் பதிந்து இயக்கிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தாலே போதும்

Read more...

மடிக்கணினி (LAPTOP)

வெள்ளி, 6 மே, 2011

லேப் டாப் வாங்கும் முன்

கீழ்கண்ட பொருட்களில்
நீங்கள் எதை வாங்க விரும்புகிறீர்கள்?

ஃப்ளாட் டிவி

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

லேட்டஸ்ட் மாடல் செல்போன்

லேப்டாப் கம்ப்யூட்டர்


இப்படி ஒரு கேள்வியை ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டு சர்வே செய்தது ஒரு ஏஜென்ஸி. இந்த சர்வேயில் பலரும் ‘டிக்’ அடித்து தேர்வு செய்தது லேப்டாப் கம்ப்யூட்டரைத்தான். மடியில் குழந்தை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக லேப்டாப் இருந்தாக வேண்டும் என்று நினைக்கிற நிலை இன்றைக்கு!நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அலுவலக வேலையைச் செய்து கொள்ளும் வசதி; மெயில்கள், மார்க்கெட்டின் லேட்டஸ்ட் ஏற்றயிறக்கங்கள், ரயில், விமானம் போன்றவை குறித்த தகவல்கள் என உங்களிடம் ஒரு லேப்டாப் இருந்தால் விரல் சொடுக்கும் நேரத்தில் அத்தனையும் செய்து முடித்துவிடலாம். இதனால்தான் எல்லோரும் அதை வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால், லேப்டாப் வாங்கும்போது என்னென்ன விஷயங்கள் பார்க்க வேண்டும், அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்கிற பல விஷயங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதை சொல்லத்தான் இதோ இந்தக் கட்டுரை.

இரண்டுவித லேப்டாப்!

லெனோவா, ஹெச்.பி., ஏசர், டெல் போன்ற முன்னணி பிராண்டட் நிறுவனங்கள் லேப்டாப்களை தயாரிக்கின்றன. முதலில் எந்த நிறுவனத்தின் லேப்டாப் வாங்கப் போகிறீர்கள்? அதற்கான பட்ஜெட் எவ்வளவு? உங்களுக்கு என்னென்ன அப்ளிகேஷன்கள் தேவை? என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

இரண்டு வகையான லேப்டாப் கள் இருக்கிறது. ஒன்று, கமர்ஷியல் லேப்டாப்; இன்னொன்று, கன்ஸ்யூமர் லேப்டாப். அதிக பயன்பாடுகள் வேண்டும் என்பவர்கள் கமர்ஷியல் லேப்டாப் வாங்குவது நல்லது. குறைந்த பயன்பாடுகள், தவிர குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த நினைப்பவர்கள் கன்ஸ்யூமர் லேப்டாப் வாங்கலாம்.

கன்ஸ்யூமர் லேப்டாப்பில் இன்ஸ்பிரேஷன், ஸ்டூடியோ, வெப் கேமிரா போன்ற அம்சங்கள் இருக்கிறது. நான்கு மணி நேரத்திற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஃபேன்ஸியாகவும் இருக்கும். இல்லத்தரசிகள், படிக்கும் குழந்தைகள், வீட்டிலிருந்தபடி பங்குச் சந்தை முதலீடு செய்பவர்கள் போன்றோர்களுக்கு கன்ஸ்யூமர் லேப்டாப் மிகச் சரியானது.
கமர்ஷியல் லேப்டாப்களை பத்து மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதிகம் சூடாகாது. மிக வேகமாகவும், அதே நேரத்தில் நாம் அதில் பதிந்து வைக்கும் டேட்டாக்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். அதிக ஸ்டோரேஜ், 4 ஜி.பி. ராம் என பல வசதிகள் இருக்கிற இந்த லேப்டாப் கல்லூரி மாணவர்கள் புராஜெக்ட் செய்ய, பிஸினஸ்மேன்கள் அதிக சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்யப் பயன்படும். அதிக வசதிகள் கொண்ட இது கன்ஸ்யூமர் லேப்டாப்பைவிட வெறும் 3,000 ரூபாய் அதிகமாகும்.



ஸ்கிரீன்!

மாணவர்கள், பிஸினஸ்மேன்கள் 14.1 இஞ்ச் ஸ்கிரீன் அளவு கொண்டதை வாங்கலாம். இதன் எடை குறைவாக அதாவது 1.9 கிலோதான் இருக்கும். வீட்டில் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் 15.6 இஞ்ச் ஸ்கிரீன் வாங்கலாம். இதன் எடை 2.25 கிலோ. ஆனால் இரண்டின் விலையும் ஒன்றுதான்.

பேட்டரி!

பேட்டரியைப் பொறுத்தவரை ‘நயன்செல்’ பேட்டரி கேட்டு வாங்கணும். இந்த பேட்டரியை பயன்படுத்தினால் ஆறு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். இதுவே ’சிக்ஸல்’ பேட்டரி எனில் நான்கு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பேட்டரியே உங்கள் லேப்டாப்புக்குத் தேவை.

வாரன்டி காலம்!

அனைத்து நிறுவனங்களும் லேப்டாப்களுக்கு ஒரு வருட வாரன்டி காலம் கொடுக்கின்றன. கமர்ஷியல் லேப்டாப் எனில் மூன்று வருடம் வரைகூட வாரன்டி கொடுக்கிறார்கள். அதற்கு மேலும் கூடுதலாக வாரன்டி தேவைப்பட்டால் அந்த நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம். டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தக் கூடுதல் வாரன்டியை நீங்கள் ஆன்லைன் மூலமாகத்தான் பெற முடியும். இதற்கு 5,000 கட்ட வேண்டியது இருக்குமாம். லெனோவா, ஹெச்.பி. போன்ற நிறுவனங்களில் பணமாகக் கொடுத்தால் பத்து நாட்களில் கூடுதல் வாரன்டி கிடைக்கும்.

சர்வீஸ்!

லேப்டாப்களைப் பொறுத்தவரை ‘ஆன்சைட் வாரன்டி’ மற்றும் ‘கேரியிங் வாரன்டி’ என இரண்டு விதமான சர்வீஸ்கள் உண்டு. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல் அல்லாமல் லேப்டாப் என்பது கையில் தூக்கிக் கொண்டு செல்லக் கூடிய பொருள் என்பதால்தான் இப்படி இரண்டு விதமான சர்வீஸ்கள். ‘ஆன்சைட்’ என்பது சர்வீஸ் ஆட்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் சரி செய்வார்கள். ‘கேரியிங்’ என்பது நாம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அங்கு ரிப்பேரை சரி செய்து கொள்வது.

‘கேரியிங் வாரன்டி’க்கு சுமார் 4,000 ரூபாயும், ‘ஆன்சைட் வாரன்டி’க்கு 6,000 ரூபாயும் கட்டணம் சொல்கிறார்கள். உங்கள் சௌகரியத்துக்கு ஏற்ற மாதிரி வாங்கலாம்.

விலை!

‑ நோட் புக் மாடல் – இதை ஹேண்ட்பேக்கில்கூட வைத்துக் கொண்டு போகலாம். இன்டர்நெட், எம்.எஸ்.ஆபீஸ். போன்ற சில வசதிகள் மட்டும் கிடைக்கும் இந்த பேஸிக் மாடலின் விலை 16,500. பயணத்தின் போது பயன்படுத்த இது மிகச் சிறந்தது.

கேம்ஸ் ஆப்ஷன், கிராஃபிக் ஆப்ஷன், வெப் கேமிரா போன்ற வசதிகளுடன் இருக்கும் மாடல் வீட்டில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. இதன் விலை 35,000 முதல் 40,000 வரை கிடைக்கிறது.

மல்டி மீடியா ஐ5, ஐ7 போன்ற வசதிகளுடன் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழில்நுட்பம் வரை இருக்கும் இதன் செயல்பாடு மிக வேகமாகயிருக்கும். இதன் விலை 41,000 முதல் 60,000 வரை.

உதிரிப் பாகங்கள்!

பொதுவாக லேப்டாப் வாங்கும்போது பேக், சார்ஜர், பேட்டரி போன்றவைகளை கண்டிப்பாகக் கொடுப்பார்கள். இது போக கூடுதல் உதிரிப் பாகங்கள் தேவைப்பட்டால் அதை நாம்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது அதிகமான வெப்பம் வெளியேறும். இது உடலுக்கு நல்லதல்ல. இதனைத் தவிர்க்க ‘கூலிங் பேட்’ வாங்கிக் கொள்வது நல்லது. இதன் விலை சுமார் 1,550.

உங்களின் லேப்டாப் இன்டர்னல் செக்யூரிட்டிக்காக ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பொறுத்திக் கொள்வது நல்லது. மெக்காஃபே, கேஸ்பர்ஸ்கை, நார்டன் போன்ற ஆன்டிவைரஸ் விலை 500. இது ஒரு வருடத்திற்கானது. வயர்லெஸ் மவுஸ் 850 முதல் 1,000 வரை கிடைக்கிறது. பவர்பாயின்ட் 2,800.
இன்றைய காலகட்டத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பல வேலைகளைச் செய்ய லேப்டாப் அவசியம். அதை வாங்கும் போது மேற்சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பிற்பாடு வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

இத்துடன் ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவது சாலச் சிறந்தது. ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை மட்டுமே கூடுதலாக செலவாகும் (ஹோம் பேசிக் ). மற்றபடி, ஒரிஜினல் ஓ எஸ் பயன்படுத்துவதன் மூலம், தேவையில்லாத வைரஸ் தாக்குதல், டேட்டா லாஸ் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

(நன்றி.அஜிஸ்பிளாக்)

Read more...

பவர்பாயிண்ட் to ஃப்ளாஷ்

செவ்வாய், 3 மே, 2011



பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம்.

கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது,

இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும் கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும்.



கன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents -> authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools -> Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்.


--
ஜி.என்

Read more...

எக்ஸ்பியில் எர்ரர் செய்தி வராமல் இருக்க

சனி, 30 ஏப்ரல், 2011


எக்ஸ்பியில் எர்ரர் செய்தி வராமல் இருக்க

Posted: 29 Apr 2011 11:34 AM PDT

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன.

சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய?

இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செலக்ட் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து எர்ரர் செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாமப்பா! ஆளை விடுங்க!! என்று எண்ணுபவரா நீங்கள். அப்படி என்றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்.

 

ஜி.என்
 

Read more...

விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011


விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்

மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில், விண்டோஸ் 7 தரும் புதிய வழிகளையும் வசதிகளையும் காணலாம்.

எக்ஸ்பி சிஸ்டத்தில் பைல்களைக் கையாள, பைல்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த விபரமும் தெரிந்திருக்க வேண்டிய தில்லை.




விண்டோஸ் 7 சிஸ்டம், எக்ஸ்பி சிஸ்டத்தின் விரிவாக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கீழே இன்னும் தெளிவான ஒரு இயக்கத்தைத் தர ஐந்து குறிப்புகள் தரப்படுகின்றன.

1. டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி:

விண்டோஸ் 7 இயக்கத்தில் Documents என்பது, எக்ஸ்பி இயக்கத்தில் நமக்குக் கிடைத்த மை டாகுமெண்ட்ஸ் (My Documents) போல்டராகும். ஆனால் இது ஜஸ்ட் ஒரு போல்டர் மட்டுமல்ல; டாகுமெண்ட்ஸ் என இங்கு அழைக்கப் படுவது இங்கு ஒரு லைப்ரரியாக உள்ளது.

ஆபீஸ் தொகுப்பில் எதனை சேவ் செய்தாலும், அது இந்த லைப்ரேரியில் தான் சேவ் ஆகும். இது எக்ஸ்பியில் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்வதற்கு ஒப்பாகும். ஸ்டார்ட் மெனுவினைக் கிளிக் செய்தால், அங்கு டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி இருப்பதைக் காணலாம்.

அதில் நீங்கள் உருவாக்கிய அனைத்து பைல்களும் இருப்பதைக் காணலாம். அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து, அங்கு Libraries groupல் டாகுமெண்ட்ஸ் என்பதில் கிளிக் செய்தால், இவற்றைக் காணலாம். எனவே, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் முதலில் இயங்குகையில், இந்த டாகுமெண்ட்ஸ் லைப்ரேரியில் பைல்களை சேவ் செய்வதே நல்லது.

2. விரைவாக பைல் பெற லைப்ரரி:

விண்டோஸ் சிஸ்டத்தின் முந்தைய பதிப்புகளில், பைல்களை நாம் போல்டர் களில் சேவ் செய்தோம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் நூற்றுக் கணக்கான பைல்களைக் கொண்டுள்ள போல்டர் களைக் காட்டும். நாம் உருவாக்கிய போல்டருக்கேற்ற வகையில், சில பல நிலைகளில் துணை போல்டர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். இது போன்ற பல துணை போல்டர்களை அமைத்தால், பைல்களைத் தேடிக் கண்டறிந்து திறப்பது சற்று சிரமமாக இருக்கும்.

விண்டோஸ் 7 லைப்ரேரி என்பது ஒரு ஸ்டோர் ரூம் மாதிரி. நிறைய கதவுகள் நிறைந்த ஹால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். முதல் கதவில் "Documents" என்று எழுதியுள்ளது. இதைத் திறந்தவுடன் அங்கு நம் பைல்கள் அனைத்தையும் அடக்கியுள்ள, சில பைல் கேபினட்டுகள் இருக்கும். அடுத்த கதவில் "Pictures" என்று எழுதியுள்ளது.

இங்கு உங்கள் படங்கள் பைல்கள் அடங்கிய கேபினட்டுகள் உள்ளன. முன்பு டஜன் கணக்கில் இருந்த படிக்கட்டு அமைப்பெல்லாம் இல்லாமல், ஒரு சில லைப்ரேரிகளைக் கொண்டு இப்போதைய லைப்ரேரி அமைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் என்ன நடக்கிறது என்றால், லைப்ரரிகளில் உங்கள் பைல்கள் ஸ்டோர் செய்யப்படுவதில்லை. உங்கள் பைல்கள், இன்னும் பழைய முறையில், பல படிக்கட்டுகளாகத்தான் ஸ்டோர் செய்யப்படுகின்றன. லைப்ரேரி என்ற அமைப்பில் இவை சார்ந்த போல்டர்கள் இழுக்கப்பட்டு உங்களுக்கு பைல்கள் கிடைக்கின்றன. இது முதலில் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் சற்றுப் பழகி விட்டால், இதிலிருந்து பைல்களை எடுத்துப் பயன்படுத்துவது எளிதாகிவிடும்.

இல்லை, எனக்கு பழைய முறைப்படி அனைத்து போல்டர்களைக் காட்டும் படிக்கட்டு முறைதான் வேண்டும் என்றால், அதுபோல் செட் செய்திடவும் வழி தரப்பட்டுள்ளது. இதற்கு Organize மெனுவிலிருந்து Folder And Search Options தேர்ந்தெடுக்கவும். அடுத்து Navigation Pane என்ற பிரிவில், Show All Folders என்ற ஆப்ஷனில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.

3. ஹோம் குரூப் பாஸ்வேர்ட் தவிர்க்கவும்:

ஹோம் குரூப்ஸ் என்பதுவும் லைப்ரரி போன்றதே. ஆனால் அவை நெட்வொர்க்கில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இயங்கு கின்றன. ஹோம் குரூப் நெட்வொர்க்கில் இயங்கும் எந்த கம்ப்யூட்டரும், மற்ற கம்ப்யூட்டருக்குத் தன் கம்ப்யூட்டரில் உள்ளவற்றை அணுகவும், அவற்றில் எழுதவும் அனுமதியினை வழங்கும்.

ஆனால், நீங்கள் இங்கு எதிர்பார்த்தபடி, ஹோம் குரூப்கள் பாஸ்வேர்டினால், பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இங்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை அமைப் பதனைக் காட்டிலும், விண்டோஸ் 7 சிஸ்டம், பத்து கேரக்டர்கள் அடங்கிய பாஸ்வேர்டினைக் கொடுக்கிறது.

இந்த பாஸ்வேர்டை எழுதி வைத்துக் கொண்டு, அதனைத் தவற விட்டுவிடாதீர்கள். முதன்முதலில் நீங்கள் உங்கள் கம்ப்யூட் டரை இணைக் கும் போது தான் இது உங்களுக்குத் தேவையாய் இருக்கும். இணைந்த பின்னர், நீங்கள் அந்த பாஸ்வேர்டினை மாற்றிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டம் ஏன் இது போல ஒரு பாஸ்வேர்டை, தான் உருவாக்கும் பாஸ்வேர்டைக் கட்டாயப்படுத்துகிறது என்று தெரியவில்லை. மேலும், இந்த புதிய அம்சமானது, விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே செயல்படுகிறது. இது மைக்ரோசாப்ட் எடுத்த தவிர்க்க வேண்டிய முடிவு. ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியதுள்ளது.

4. ஜம்ப் லிஸ்ட் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம்:

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அனைவரும் விரும்பும் பல விஷயங்களில் ஜம்ப் லிஸ்ட் ஒன்றாகும். நீங்கள் பைல் ஒன்றை, அதனை எங்கு சேவ் செய்திருந்தாலும், அதை டாஸ்க் பாரில் பின் செய்துவிட்டால், அதனை உடனடியாகப் பெற முடியும். புரோகிராம் ஒன்றை இணைக்க, கீழே கொடுத்துள்ள படி செயல்படவும்.

1. ஸ்டார்ட் மெனுவினைக் கிளிக் செய்க.

2. அப்ளிகேஷன் புரோகிராமினைக் கண்டறிந்து அதனை ரைட் கிளிக் செய்திடவும்.

3. இப்போது, Pin To Taskbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் 7 உடனே ஐகான் ஒன்றை, டாஸ்க்பாரில் இணைத்துக் கொள்கிறது.

நீங்கள் இந்த அப்ளிகேஷன் பட்டியலில் அதற்கான பைல்களையும் பின் செய்திடலாம். பைலைத் திறந்து, பின்னர் அதன் புரோகிராம் ஐகானில், ரைட் கிளிக் செய்திடவும். பைல் ஒன்றை பின் செய்த பின்னர், அதனை வேகமாகத் திறந்திட முடியும். இதற்கு, புரோகிராம் ஐகானில் ரைட் கிளிக் செய்து, பின் செய்த பிரிவில், அந்த பைலைத் தேர்ந்தெடுக் கலாம்.

இங்கு நீங்கள் அண்மையில் பயன்படுத்திய பைல் பட்டியலையும் (Most Recently used files) காணலாம். ஆனால் இந்த பட்டியல், நீங்கள் புதிய பைல்களைத் திறந்து பயன்படுத்து கையில் மாறும். ஆனால் பின் செய்யப்பட்ட பைல்களின் பட்டியல், நீங்களாக, மேலும் பைல்களைச் சேர்க்கும் போதும், நீக்கும் போதும் மட்டுமே மாறும்.

5. விண்டோஸ் எக்ஸ்புளோரர் இருமுறை திறந்து பயன்படுத்தல்:

ஒரே நேரத்தில், இரண்டு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து பயன்படுத்து வது மிக எளிதான ஒன்றாகும். முதலில் டாஸ்க்பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது, வழக்கமாக நீங்கள் திறப்பது போலத் திறக்கவும்.

(இதுவே ஒரு நல்ல, சிறப்பான அம்சமாகும்.) அடுத்து, விண்டோஸ் டைட்டில் பாரினை, இடது புறமாக இழுத்துச் செல்லவும். விண்டோஸ் 7 சிஸ்டம், திரையின் இடது புறம் ஒரு அவுட்லைன் காட்டும் வரை இழுத்துச் செல்லவும். இப்போது விண்டோவினை இழுத்துச் செல்வதனை விட்டுவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டம், உங்கள் மானிட்டர் திரையின் இடது பாதியில் எக்ஸ்புளோரர் விண்டோவினை அமைத்திருக்கும்.

இரண்டாவதாக ஒரு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்க, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எக்ஸ்புளோரர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். மேலே கூறியபடி, மவுஸால் அழுத்தி இழுக்கவும். ஆனால் இந்த முறை வலது பக்கம் இழுக்கவும். இப்போது திரையின் இரண்டு பகுதிகளில், இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர்கள் திறக்கப் பட்டிருப்பதனைக் காணலாம். இதனால், பைல்களை ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதும், காப்பி செய்வதும், இணைப்பதுவும் எளிதாகிறது.

மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே இந்த வேலையை மேற்கொள்ள, விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, இடது அம்புக் குறிக்கான கீயை அழுத்தவும். இவ்வாறு செய்வதனால், திரையில் காணப்படும் விண்டோ, தானாகவே இடது பக்கம் இழுக்கப்பட்டு அமைக்கப்படலாம். இதே போல விண்டோஸ் கீ யை அழுத்திக் கொண்டு, வலது அம்புக் குறி கீயினை அழுத்த, வலது பக்கம் ஒரு விண்டோ அமைக்கப்படுவதனைக் காணலாம்.

ஜி.என்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP